Friday, November 05, 2010

இனிய தீபாவளி வாழ்த்துகள்

தேசம் விட்டு தேசம் வந்தும்
நம்மை நேசம் குறையாமல்
வாழ வைப்பது இத்தகைய திருநாளே

சர வெடியின் சத்தம் போல்
வேறொன்றும் இசை உண்டோ
இன்று மனதில் பொங்கும்
மகிழ்ச்சியை போல் வேறொன்றும்
இனிப்புண்டோ


எண்ணை குளியல் , புத்தாடை
பணியாரம் .பட்டிமன்றம்
விஷ்ணு வெடியின் மாறா வாசம்
நினைத்தாலே
ஆஹா இங்கும் நம் மண்வாசம்

இங்கு காலையில் எழுப்பி
எண்ணை வைக்க அம்மா இல்லை
புத்தாடை எடுத்து கொடுக்க அப்பா இல்லை
போட்டி போட்டு வெடி வைக்க தம்பி இல்லை
இனிப்பு கொடுக்க ஆளில்லை
தீபாவளி காசு வாங்க வாசலில் யாருமில்லை

வெடி வெடித்தால் 911 வரும்
கதவு திறந்தால் குளிர் வரும்
இருந்தாலும்
இன்று தீபாவளி , இன்று தீபாவளி
என்று மனதில் எழும் குதூகலத்திற்கு
அளவில்லை

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
தேசம் விட்டு தேசம் வந்தும்
நம்மை நேசம் குறையாமல்
வாழ வைப்பது இத்தகைய திருநாளே

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

No comments: