நானும் காத்திருபேன்
குளிர் பணியை மொத்தமாய் விழுங்கும்
மரங்களின் இடையில்
நான் ...
உன் இதழ் முத்ததின் இதம் தேடிமரங்களின் இடையில்
நான் ...
போர்வைக்குள் நிர்வானமானேன்
விடியும் வரை இருள் குடித்து ,
உன் மயக்கம் தெளியாமல்,கனவில்
நானும் நின்றேன் மரங்களுடன்
வெண் பணியுடன் காதல் செய்யும்
மரத்தின் கொஞ்சல் கேட்டேன்
மரம் கேட்டது
"அடி காதலியே, சூரியன் வந்து
உன் முத்தங்களை களவாடும்
போது நான் என்ன செய்வேன் சொல் "
பனி சொன்னது
"உருகி உருகி அழுவாய் "
"இல்லை "
"புயல் வீசி என்னை தேடுவாய் "
"இல்லை "
'நிலம் துறந்து உயிர் துறப்பாய் "
"இல்லவே இல்லை "
"பின்பு "
"இலை வளர்த்து , அதில் பல
வாசனை மலர் விட்டு
கனி பெற்று ,
சிட்டு குருவியின் கூடுகள்
கொண்டு அலங்கரித்து ,
உனக்காக பூங்கொத்துகளுடன்
தவம் போல் காத்திருபேன்"
என்றது
நானும் காத்திருபேன்
உனக்காக .
உதவி : முரளிகுமார்
உன் மயக்கம் தெளியாமல்,கனவில்
நானும் நின்றேன் மரங்களுடன்
வெண் பணியுடன் காதல் செய்யும்
மரத்தின் கொஞ்சல் கேட்டேன்
மரம் கேட்டது
"அடி காதலியே, சூரியன் வந்து
உன் முத்தங்களை களவாடும்
போது நான் என்ன செய்வேன் சொல் "
பனி சொன்னது
"உருகி உருகி அழுவாய் "
"இல்லை "
"புயல் வீசி என்னை தேடுவாய் "
"இல்லை "
'நிலம் துறந்து உயிர் துறப்பாய் "
"இல்லவே இல்லை "
"பின்பு "
"இலை வளர்த்து , அதில் பல
வாசனை மலர் விட்டு
கனி பெற்று ,
சிட்டு குருவியின் கூடுகள்
கொண்டு அலங்கரித்து ,
உனக்காக பூங்கொத்துகளுடன்
தவம் போல் காத்திருபேன்"
என்றது
நானும் காத்திருபேன்
உனக்காக .
உதவி : முரளிகுமார்